பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது அசுத்தமான வீட்டில் விலங்குகளை கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் செல்லப்பிராணிகளை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முயல்கள், எலிகள் மற்றும் பறவைகள் உட்பட 167 விலங்குகள் அசுத்தமான ஒரு வீட்டில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பிரித்தானிய காவல்துறை கண்டுபிடித்தது.
மிருகங்களை கொடூரமான சூழ்நிலையில் இருப்பது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

நார்தம்ப்டன்ஷையர் காவல் துறையின் வெளியீட்டின்படி, அங்குள்ள ஒரு வீட்டில் தொடர்ச்சியாக துர்நாற்றம் வீசியது.முயல்கள், வெள்ளெலிகள், எலிகள், கினிப் பன்றிகள் போன்ற மிருகங்கள் மற்றும் பறவைகள் மோசமான, பொருத்தமற்ற சூழ்நிலைகளில் வாழ்வதை கண்டுபிடித்தோம்.அவற்றுடன் சில இறந்த விலங்குகளும் கூண்டுக்குள் இருந்தன.

இதையடுத்து வீட்டின் உரிமையாளரான 61 வயது கிம் ஸ்டார்க்ஸ் விலங்குகளை வைத்திருப்பதற்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக அவருக்கு தடை விதிக்கப்பட்டும் அதை மீறியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட கிம்முக்கு 34 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *