இலங்கை பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதாக IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பணி இதற்கு காரணமாகியுள்ளதாக IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுரா இலங்கை விஜயத்தை அடுத்து இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் பொருளாதார மறு சீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் அவசியம் எனவும் கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.

கென்ஜி ஒகமுரா இலங்கையில் ஜனாதிபததி, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *