ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது.

சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன.

இந்த கோர விபத்தில் 260 பேர் பலியாகியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த 20 ஆண்டு காலத்தில் நடந்த ரயில் விபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்து என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *