இதில் ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பிரதீப்குமார், விஷ்னோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய விவேக் கே.கண்ணன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது பணத்துக்காக கொலைகள் செய்யும் கொலைகாரர்கள் பற்றிய உணர்ச்சி மிகுந்த படமாக இருக்கும்.

அதிரடி படம் கிடையாது. ஆனால் கூலிப்படைகள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை பற்றியதாக இருக்கும். சென்னை, மும்பை, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் படமாக்கி உள்ளோம். பிரியாமணியிடம் இந்தக் கதையை சொன்னதுமே நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஜாக்கி ஷெராப் கதைக்குள் வந்ததும் பான் இந்தியா படமாக மாறியது. சன்னி லியோன் தீவிரமான நடிப்பை கொடுத்துள்ளார். சிவமணி இந்தப் படத்துக்கு இசையை ரத்தமும் சதையுமாக கொடுத்துள்ளார் என்றார். ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *