ஜெர்மனியில் சிறுமியின் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் வீசப்பட்ட சிறுமியின் உடலை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஜெர்மனியில் கடந்த 13 ஆம் திகதி ரைலான்வாஸ் மாநிலத்தில் உள்ள வொரைடன் பேர்க் என்ற கிராமத்தில் 12 வயது சிறுமியானவர் தனது பெண் சிநேகிதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த 12 வயது சிறுமி சிநேகிதியிடம் இருந்து 3 கிலோ மீற்றர் துரத்தில் உள்ள தனது வீட்டுக்கு காட்டு பாதையின் ஊடாக வந்திருக்கின்றார்.

இந்த சிறுமியானவர் தனது வீட்டை சென்று அடையாத காரணத்தினால் சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிஸார் நேற்று முன்தினம் பலத்த தேடுதல் ஈடுப்பட்ட போது கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டு பிரதேசத்தில் சிறுமியின் உடலை கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

தற்போது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிய வந்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *