நாட்டை புதுயுகத்துக்குள் அழைத்துச் செல்லும் உயர் பணிக்கு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த மக்கள், அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக கல்வி
இராஜாங்க அமைச்சர்  அருணாச்சலம்  அரவிந்தகுமார்  தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் நாம் எம்மிடையே காணப்படும் கருத்து வேற்றுமைகளையும் அரசியல் முரண்பாடுகளையும் களைந்து நம் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எல்லோரும் பரஸ்பரம், புரிந்துணர்வு, நல்லெண்ணத் துடன் ஒன்றுபட்டு ஒற்றுமையோடு பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள எமது நாட்டையும் எமது மலையக சமுதாய உறவுகளையும்  அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *