பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய புதல்வர் இளவசர் ஹாரி அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார்.

கடந்த 130 ஆண்டுகளுக்கு பின்னர் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகுவது இதுவே முதல் முறையாகும்.

இங்கிலாந்தில் வெளியாகும் டெய்லி மிரர், சன்டே மிரர் ஆகிய பத்திரிகைகளின் வெளியிட்டு நிறுவனமான மிரர் குரூப் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் அவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

100 பிரபலங்களுடன் இளவரசர் ஹாரியும் மிரர் குழுமத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இ்நத வழக்கை விசாரிக்கும் லண்டன் உயர் நீதிமன்றத்தில் இளவரசர் ஆஜராகி தொலைபேசி ஒட்டுக்கேட்டப்பட்டமை குறித்து சாட்சியமளிக்க உள்ளார்.

இதற்கு முன்னர் பிரித்தானிய மன்னர் 7வது எட்வர்ட் 1870 ஆம் ஆண்டு விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *