உலகக் கிண்ண தகுதிச் சுற்று மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது.
7 பேட்ஸ்மேன்கள், 9 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 ஆல்-ரவுண்டர்கள் அடங்கிய ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஆரம்ப அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று விக்கெட் கீப்பர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
T20 உலகக் கிண்ணப் போட்டியில் காயமடைந்த துஷ்மந்த சமிர 7 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குசல் ஜனித் பெரேரா இரண்டு வருடங்களின் பின்னர் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, ஆரம்ப அணியில் ஏஞ்சலோ மெத்தியூஸும் இணைக்கப்பட்டுள்ளார்.
மத்திஷ பத்திரன, துஷான் ஹேமந்த மற்றும் லக்ஷான் சந்தகன், லசித் கிருஸ்புள்ளே ஆகியோரும் ஆரம்ப அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
30 பேரில், இளைஞர் அடிப்படை அணியில் இருந்து 15 பேர் ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட உள்ளனர்.