நானுஓயா – ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹொரண குடுஉதுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்​ை

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *