ஜனாதிபதியிடமிருந்து நல்ல செய்தி (Photos)

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதை கட்டாயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]

IPL களத்தை அதிர வைத்த இன்ஜினியர்

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில்  MI அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது. இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் […]

வட மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு…

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்புவில் உள்ள அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது,  வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை […]

IMF பிரதநிதிகள் இலங்கையிடம்…

கடன் வேலைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் அளவில் ​உள்நாட்டு, வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மே 11 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை நாட்டில்  தங்கியிருந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை வௌியிட்டுள்ளனர்.

இந்த தோல்வி என்னுடையது அல்ல – ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த தோல்வி என ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த தோல்வி என்னுடையது அல்ல. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்ட தோல்வி” என தெரிவித்தார்.

ஜப்பானுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவை ஜனாதிபதி சற்று முன்னர் சந்தித்துள்ளார். இதன் போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பான உண்மைகளை தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானிய முதலீடுகளையும் நாட்டுக்கு கொண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை அசத்தல் வெற்றி

2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ (LSG) அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி.அபார வெற்றிபெற்றுள்ளது 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை வீரர் ஆகாஷ் […]