இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு பெரும் கஷ்டமாக இருக்கும்.

எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது.

இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது.

வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது.

இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும்.

அந்தவகையில் இதனை குறைக்க நாம் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்தால் போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உணவு உண்ணும் போது தண்ணீர் அருந்தக் கூடாது. இது உணவுடன் அல்லது உடனடியாக தண்ணீர் குடிப்பதால் அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பச்சை சாலட் மற்றும் தயிர் உணவுடன் உட்கொள்ளக்கூடாது. அவற்றை எப்போதும் சிற்றுண்டி நேரத்தில் சாப்பிடுவது நல்லது.

நெய் கொழுப்பை அதிகரிக்கச் செய்யாது, செரிமானத்தை சரியாகச் செய்து, இரைப்பையை சீராக வைக்க உதவுகின்றது.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இரவு உணவைச் சாப்பிடுங்கள்.இதனால் கொழுப்பு அதிகரிக்காது.

மைதா நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும், இது எடையைக் குறைக்க உதவும்.

நெய்க்கு பதிலாக கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தவும்.

இரவு உணவில் உப்பை குறைவாக சாப்பிடுங்கள். அதிக உப்பை உட்கொள்வது சிறுநீரின் அழுத்தத்தின் காரணமாக தூக்கத்தில் இடைவெளி அல்லது கடுமையான தாகத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *