நாட்டின் மூன்று மாவட்டங்களில் 7 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டடட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, ஹாலிஎல, பசறை, பதுளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(05) இரவு 7 மணிவரை அமுலாகும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டடட ஆய்வு நிறுவகம் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *