BLUE MOUNTAIN அணி நடத்திய மறைந்த (அருள் ராஜ்) கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் கிண்ணத்தை பண்டாரவளை SuperYouth அணி வெற்றிக் கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தை RCC Attampitiya அணியும் பெற்றன.

மேற்படி இரண்டு அணிகளுக்கும் வெற்றி கிண்ணங்களும் பண பரிசில்களும் வழங்கப்பட்டன.

அதேபோல் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுப்பர் யூத் அணியின் நயன சஸாங்கவும் (Nayana Sasanka) சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியின் ஜனித்தும் (Janith) தெரிவாகினர்.

இதன்போது BLUE MOUNTAIN அணியின் முன்னாள் வீரர் அருள் நினைவாக அவரது குடும்பத்தார் வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.

வெற்றி குறித்து சுப்பர் யூத் தலைவர் கூறும் போது: BLUE MOUNTAIN அணிக்கு நன்றிகள். எனறார்.

போட்டி தொடர்பில் BLUE MOUNTAIN அணி வீரர் நிதர்ஷன் கருத்து தெரிவிக்கையில்:

ஊவா மாகாணத்தை பிரதிநிதிதுவப்படுத்தி பங்கேற்ற சகல தோட்ட, மற்றும் நகர் புற அணிகளுக்கும் நன்றி. வெற்றி பெற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள். முக்கியமாக சிறய மைதானத்தில் இந்த போட்டிகளை நடத்தினோம். மலைலயகத்தில் சிறந்த ஓட்ட வீரர்கள், கெரம் உள்ளிட்ட பல திறமையானவர்கள் உள்ளனர்.

ஆகவே எம்மவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். எம்மிடம் வளங்கள் குறைவு ஆகவே அவை பற்றியும் சிந்திப்பது நல்லது. முக்கியமாக அண்ணாசச்சி (annachinews.com) இணைய தளத்துக்கு நன்றிகள். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *