ஒடிசா ரயில் விபத்து – நேரில் பார்வையிட்டார் மோடி

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விபரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து கட்டாக் […]

மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட தாய்

எகிப்தில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ள குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படுள்ளார்.இந்த கொலை சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார்.கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்துள்ளார்.இதன்படி அவரது உடலைச் சிறு சிறு பாகங்களைத் துண்டித்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா அங்கே வருகை […]

மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய புதல்வர் இளவசர் ஹாரி அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார். கடந்த 130 ஆண்டுகளுக்கு பின்னர் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகுவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் வெளியாகும் டெய்லி மிரர், சன்டே மிரர் ஆகிய பத்திரிகைகளின் வெளியிட்டு நிறுவனமான மிரர் குரூப் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் அவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 100 பிரபலங்களுடன் இளவரசர் ஹாரியும் […]

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர் பலி – மீட்புப் பணிகள் நிறைவு…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன. இந்த கோர விபத்தில் 260 பேர் பலியாகியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 20 ஆண்டு […]

ரயில் விபத்து – 233 பேர் உயிரிழப்பு: தமிழக அரசின் அதிரடி உத்தரவு

ஒடிசாவில் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு […]

தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில் வித்து. 200 க்கும் அதிகமானோர் பலி 900 பேர் காயம் என தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் […]

வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவதற்கு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை அங்கீகாரம் அளித்துள்ளன. அதன்படி, முதல் தடவையாக வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து அமெரிக்கா விடுபட்டுள்ளது. கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன் அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்ட நிலையில் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது. இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறப்பட வேண்டும். இது தொடர்பில் […]

ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவர் பலி

பிரான்ஸில் வாகனம் ஒன்றில் ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி ஒருவர் அதே வாகனத்தில் மோதி பலியாகியுள்ளார். அகதி ஒருவர் வீதியின் அருகே இருந்த மரம் ஒன்றில் ஏறி, வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்றில் குதிக்க முற்பட்டுள்ளார். அந்த முயற்சி பலனளிக்காமல் வாகனத்தின் முன்பக்கமாக விழுந்து, மோதுண்டுள்ளார். விபத்துக்குள்ளான அகதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த அகதி சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டு […]

ஜோர்தான் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை மணந்தார்

 ஜோர்தான் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் (Rajwa Al Saif) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமண விழா தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது. மணமகள் ராஜ்வா அல் சைஃப்  அவருக்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார்.  பட்டத்து இளவரசர் ஹுசைன் இராணுவ சீருடை அணிந்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன் […]

பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது. இந்தச் சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக கடந்த மே, 2022 உடன் மே, […]