கனடாவில் பணவீக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியம்

கனடாவில் வட்டி வீதங்களை குறைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கி வட்டி வீதங்களை தற்போதைக்கு குறைக்கும் சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப் போவதில்லை எனதெரிவித்துள்ளார். பணவீக்க நிலைமைகள் குறைவடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் கோளாறு

கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 193000 கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் உற்பத்தி செய்த கார்களே இவ்வாறு மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாகனம் தொடர்பில் கனடிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு […]

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிப்பது அதிகரிப்பு

ஒட்டாவா நகரில் கோவிட் தாக்கம் காரணமாக நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. ஒட்டாவா மக்கள் மத்தியில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டாவாவின் மருத்துவ அதிகாரி மருத்துவர் வீரா எட்சஸ்இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிகi;க அதிகரித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார். கழிவு நீர் கோவிட் தொற்று குறித்த பரிசோதனைகளின் மூலம் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என […]

ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு

கனடாவின் ரொறன்றோ நகரில் வீட்டு விற்பனை குறைவைடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஆறு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ரொறன்றோ பிராந்திய வீடு விற்பனை முகவர்கள் சபை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக பட்டியிலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 16.5 வீதம் அதிகமாக பதிவாகியது. எனினும், விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி விலை 1,082,179 டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த […]

கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்

கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாணவர் வீசாவில் கடாவிற்கு சென்ற மாணவர்களுக்கு இவ்வாறு வரையறை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட குறித்த வரையறைகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும், தொழிலில் ஈடுபடுவதற்கான வரையறைகள் வெளிநாட்டு மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வரையறுக்கப்பட்ட நேரத்தில் தொழில் புரிவதனால் வகுப்பு கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உருவாகும் எனவும், வாழ்க்கைச் […]

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை குறைக்க தீர்மானம்

இந்த விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் குறைந்தளவில் செலவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் குறைந்தளவில் செலவுகளை செய்வதற்கு ஒன்றாரியோ மக்கள் திட்டமிட்டுள்ளனர் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. பணவீக்க நிலைமைகள் விடுமுறை கால கொள்வனவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர் வெற்றி

கனடாவின் ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழை பூர்வீகமாகக்கொண்ட பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றுள்ளார். ஸ்காப்றோ தென்மேற்கு வட்டாரத்தில்இடைத் தேர்தலில் பார்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக பார்த்தி கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி இடைத் தேர்தலில் பார்த்தி 4641 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க 3854 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்காபரோ தென்மேற்கு வட்டாரத்தில் உறுப்பினராக பதவி வகித்த கெரி க்ராவொர்ட் ராஜினாமா செய்த […]

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக – ஜஸ்டின் ட்ரூடோ

பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சதியில் […]

கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்

கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில், ஏற்கனவே 26000 நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போலி நாணயக்குற்றிகள் ஒன்றாரியோவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவில் இந்த நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றிகளே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்

பெரும்பான்மையான கனடியர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது என கனடியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டுக்குள்; கூடுதலாக குடியேறிகள் வருவதனால் வீடுகள் மற்றும் சுகாதார நலன்கள் என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதாகத் கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் கல்வித்துறையிலும் பாதக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குடியேறிகளின் […]