எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் எந்தவித முடிவும் இல்லை

ஏப்ரல் 25ம் திகதி  நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனொ கணேசன் அறிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள மின்னஞ்சலில்… இது திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. இது, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் இச்செய்தி வந்தது. ஐக்கிய மக்கள் கூட்டணிசக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது […]

கர்தினாலுக்கு அதிகாரம் இல்லை-மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ அதிகாரம் உண்டு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக கர்தினாலுக்கு எநந்த வித அதிகாரமும் இல்லை என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கருத்தை கூறியுள்ளார்.

நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளிpன் வருகை இலக்கை எட்ட முடிக்க முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இப்தார் நிகழ்வு

முஸ்லிங்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன. தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். முஸ்லிங்களின் ரமழான் நோன்பு மாதம் ஆன்மீக […]

ஏப்ரல் 20க்கு பிறகு Galle Face பகுதி மாறும்

Galle Face பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் பிரதேசத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் Galle […]

மாணவர்களிடையே பரவும் நோய்…

பாடசாலை விடுமுறை முடிந்து சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது வழமையாக காணப்படுவதால், நீரிழப்பைத் தவிர்க்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார். அந்த நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில் குழந்தைகளுக்கு இயற்கையான திரவங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் குடிக்கக் கொடுக்க வேண்டும் என்று டொக்டர் தீபால் கூறினார்.

“வசத் சிரிய 2023”: பரிசு மழை

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். அழகன், அழகிப் போட்டி “வசத் சிரிய” புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வர்ணப் புகைப்படத்துடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 20-35 வயதெல்லைக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம். விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2023.04.20 ஆம் திகதி 3.00 […]

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் நடைபவணி மற்றும் ஒன்றுகூடல்

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணி மற்றும் ஒன்றுகூடல் என்பன கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது. அத்துடன், பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியும் பகலிரவு, ஆட்டமாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார். இதன்போது அமைச்சருக்கு, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் […]

தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று (17) காலை இந்த 9 கைதிகளும் தப்பி ஓடிவிட்டனர். நோன்பு நடவடிக்கைகளுக்காக தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த போது அந்த அறையில் இருந்த இரும்பு கம்பியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதிகள் வழங்கிய தகவலின்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை […]

வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (18) அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த விபத்து […]