மஹியங்கனை புன்னியஸ்தலம் புனிதபூமியாக பிரகடனம் (Photos)

மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை விகாரைக்குச் […]

வட மேல் மாகாணத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதும் ஏற்றுமதி செய்வதும் தடை

வட மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. குருணாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் இடையே தோல்கழலை நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் B.C.S.பெரேரா தெரிவித்துள்ளார்.

ADB – ஜீவன் கலந்துரையாடல்யாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. மூன்று ஆண்டு கால சீர்திருத்த திட்டத்தில் ஒருமித்த கருத்தை அடைவதே கூட்டத்தின் நோக்கமாகும். சீர்திருத்த வேலைத்திட்டமானது இலங்கையின் நீர்த்துறையில் உள்ள பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றியமைக்கும் முன்முயற்சி ADB யிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது, இது சீர்திருத்த நிகழ்ச்சி […]

இன்று O/L

இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

டெங்கு பரவினால் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கமாக அமையும்

(க.கிஷாந்தன்) சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகமும், நுவரெலியா மாநகர சபையும் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. நுவரெலியாவி டெங்கு பரவினால் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதால் டெங்கு பரவக்கூடிய இடங்களை தூய்மைபடுத்துமாறு மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதன் முதற்கட்டமாக நுவரெலியா கிரகரி வாவி குதியில் மாவட்ட செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. […]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கடும் கருத்து

சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகம் நிதி உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடான இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், அந்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது, ​​அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி

இதுவரை படிக்காத புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முயல்வதை இந்த நேரத்தில் செய்யக் கூடாது என மனநல மருத்துவர்கள் மாணவர்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச இதனை தெரிவித்துள்ளார். O?L பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் […]

விரைவில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதல்?

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். பதிவாளர் நாயகம் திணைக்களமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாத்தாண்டிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய”

O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான O?L பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

O/L பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

90% பாடசாலைகளில் நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். டெங்கு நோய்க்குள்ளாவோரில் 25 வீதமானோர் பாடசாலை சிறுவர்கள் என சுகாதார நிபுணர் திஸ்னக தசநாயக்க சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக பாடசாலைகளை அண்மித்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார். எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் […]