டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம்

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 […]

அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்

 “அனைவரும் தியாகம் செய்ய வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிஸ் கட்சி ஐந்து நாள் இழுபறிக்கு பின்னர் வியாழக்கிழமை மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், ஒரே துணைமுதல்வராக டிகே சிவகுமாரையும் அறிவித்தது. மேலும் 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை மாநில காங்கிரஸின் தலைவராக அவரே தொடர்வார் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பொதுமக்களும் ஈடுபட வேண்டும்

டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சிமன்ற அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண ஆளுநர்கள், உள்ளூராட்சிமன்ற ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர கூறியுள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பொதுமக்களும் மும்முரமாக ஈடுபட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பஸ்தரிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் துப்புரவு பணிகளை விரைவுபடுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனுமொரு பகுதியில் சுற்றுச்சூழல் துப்புரவு செய்யப்படாதிருப்பின் அந்த […]

உமா ஓயா திட்டம் இறுதி கட்டத்தில்…

உமா ஓயா நீர் மின் நிலையத்தின் முதலாவது மின்சார உற்பத்தி அலகு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அமைச்சர் இதனை கூறியுள்ளார். குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் செயற்திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (18)  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு விஜயம் செய்திருந்த போது, ​​இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரின் […]

செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஹப்புத்தளை, பிளக்வுட் இளைஞன்

நீர்கொழும்பு – பலகத்துறை கடலில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. நேற்று (17) மாலை சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கற்பாறைகளில் சிக்குண்டுள்ளதால் சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சடலத்தை மீட்கும் பணிகளில் பெக்கோ இயந்திரத்தையும் பயன்படுத்துவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில்,  நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற இளைஞர் காணாமற்போயிருந்தார். ஹப்புத்தளை, பிளக்வுட் தோட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான […]

இலங்கை வங்கியின் 2022 ஆண்டறிக்கை

இலங்கை வங்கியின் 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேராவினால் இன்று (18) நிதி அமைச்சில் வைத்து பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் www.boc.lk மற்றும் பங்குச் சந்தையின் www.cse.lk இணையத்தளங்கள் ஊடாக 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பார்வையிடலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரத்துறையினர் தெரிந்துகொள்வதற்காக மேற்படி அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை வங்கியின் நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா, பிரதான […]

4 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

 மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரத் துறை ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட விர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரது கையொப்பத்துடன், நேற்று(17) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் இரண்டாம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

CWC தலைவர் ஆளுநர் பதவிக்கு வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். அதேபோல நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் மேலும் […]

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (நிர்வாகம்) சேத்திய குணசேகர தெரிவித்தார். இந்த உரிமை கோரல் கோரிக்கை மனு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மே 15 ஆம் திகதி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் (பொதுவான பிரிவு) விசாரணைக்கு எடுத்துக் […]