உலகக் கிண்ணத்திற்க்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுத்தால், பாகிஸ்தான் அணியும் உலகக் கிண்ண தொடருக்கு இந்தியா செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜீம் சேத்தி தெளிவாகக் கூறியதை அடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்ளே, சிஇஓ ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூருக்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுக முடிவு காணவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் அணி உலகக் கிண்ண போட்டிகளில பங்கேற்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களில்தான் வைக்க வேண்டும்,

அப்படித்தான் பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் சபை கோரியது என்றும். அதே போன்றுதான் பாகிஸ்தான் அணியும் ஆடும் என்றும் நஜீம் சேத்தி திட்டவட்டமாகக் கூறியதையடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *