ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் இலக்கு சாத்தியமாகும்.

புத்தாண்டு அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் இலக்கு சாத்தியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். […]