புத்தாண்டை வரவேற்ற மலையக மக்கள்…

பிறந்திருக்கும் சோபகிருது புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து கொண்டாடினார்கள். புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு அட்டன் நீக்ரோதாரம விகாரையிலும், அட்டன் திருச்சிலுவை தேவாலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக பகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று […]