வெசாக்:விசேட போக்குவரத்து சேவைகள்

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை(05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார். இதேவேளை, இன்று(04) முதல் விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இருந்து வௌி மாகாணங்களுக்கும் வௌி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கும் இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.