உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் லியனோல் மெசியின் மனைவியின் குடும்பத்தினரின் வியாபார நிலையத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத போதும் துப்பாக்கிதாரி “மெசி நீ வரும் வரை காத்திருப்போம்” (“We’re waiting for you”) என எழுதி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 14 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *