நுவரெலியா – நானு ஓயா பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) காலை சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நானு ஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை ஸ்ரீதரன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *