தமிழர் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்த, தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ். நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது.
நல்லூரில் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் ஒன்று இடம்பெற்றது.
அத்துடன் பொத்துவில் நகரிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.