இந்திய கடற்படைக்கு சொந்தமான புத்தம் புதிய நீர்மூழ்கி கப்பல் நாளை (19) இலங்கைக்கு வரவுள்ளது.

9வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில், செயல்பாட்டு பயணமாக நாட்டிற்கு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

‘வாகீர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பற்படையின் தளபதி மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கண்காட்சிக்காக இந்திய நீர்மூழ்கிக் கப்பலைத் திறக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *