ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் மலையக பிரதிநிகளை சந்தித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை அதனால் கலந்து கொள்ளவும் இல்லை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் செயலாருமான வடிவேல் சுரேஷ் கூறுகிறார்.
ஆடியோ 1
இவ்வாறான சந்திப்புக்கள் தனியாக இடம்பெற கூடாது மாநாடாக நடைப்பெற வேண்டும் அதற்கு அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும்.
அந்த மாநாட்டில் கல்வி காணி உட்பட அனைத்து பிரச்சினைகளும் ஆராய்யப்பட வேண்டும் என வடிவேல் சுரேஷ் எம்.பி கூறுகிறார்.
ஆடியோ 2
இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் அவர்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினரை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.