(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் (ஆற்றுவாய்)  சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று முத்தரிப்புத்துறை மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வெள்ளிக் கிழமை (29.09.2023) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடலை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *