ரஷியாவுடன் பகைமை தொடர்ந்த போதிலும், 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் அமைதி திட்டம் பற்றி ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.

அவர் கூட்டத்தொடரில் தொடர்ந்து பேசும்போது, நவீன வரலாற்றில் முதன்முறையாக, தாக்குதலுக்கு உள்ளான தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையில் ஒரு வாய்ப்பு எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியா கடந்த மாதம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், ரஷிய ஆக்கிரமிப்பால் மீறப்பட்ட, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையை மீட்டெடுப்பதற்கான அமைதி திட்டம் ஒன்றை நாங்கள் முன்மொழிகிறோம் என்று பேசினார்.

ஒற்றுமையே, இதுபோன்ற படையெடுப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்யும் என்று அவர் பேசினார். இதனை 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *