(நூரளை பி.எஸ்.மணியம்)
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28 பீ விஜிதபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை  இரவு கத்திக்குத்துக்கு இலக்கான  ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விஜித்தபுர மார்காஸ்தோட்ட கிராமத்தில்  தனது வீட்டில்  வைத்து கணவன் மனைவிக்கிடையே நேற்று ( 23) சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது.
தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம்
28 பீ விஜிதபுர மார்காஸ்தோட்ட பகுதியை  சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பிள்ளையின் தந்தைய்ன அவர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே ,துடிக்க துடிக்க  உயிரழந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மனைவி பாத்திமா ரிஸ்வானாவை கைது செய்த நுவரெலியா  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா நீதிபதி சடலத்தை பார்வையிட்டதன் பின் அவரின் உத்தரவின் பிரகாரம் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *