நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கீழ் வசிக்கும் தேவையுடைய பயனாளிகளுக்கு விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய காரியாலயத்தில் வைத்து வளர்ப்பு ஆடுகள் இன்று (11) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட்,  கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது அரச கால்நடை வைத்திய அதிகாரி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *