குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யவந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து காணாமல் போயுள்ளார்.

திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு இரு பிள்ளைகள் சகிதம் இவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

முறைப்பாடு செய்ததையடுத்து ஒரு பிள்ளை சகிதம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்றுள்ளார்.

அதன்பின்னர் குடிப்பதற்கு நீர் எடுத்து வருமாறு அந்த பிள்ளையிடம் கூறியுள்ளார் .

பிள்ளை அங்கிருந்த சென்ற பின்னர் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சடலத்தை தேடும் பணி இடம்பெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *