( வாஸ் கூஞ்ஞ)

தலைமன்னார் மன்னார் வீதியில் பயணித்த இரு வாகனங்கள்  மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் திங்கள் கிழமை (21) பிற்பகல் மூன்று மணியளவில் மன்னார் தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப்பண்ணையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக ஆரம்ப விசாரணையில் தெரியவருவதாவது.

தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இறந்தவரான மனோகரன் நிசாந்தன் என்பவர் பேசாலையிலிருந்து தனது மோட்டர் சைக்கிளில் தனிமையாக தனது கிராமமான தலைமன்னார் ஊர்மனைக்கு பயணித்துக் கொண்டிருந்தபொழுது வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுல்லா வந்த டொல்வின் என்ற வாகனம் தலைமன்னார் ஊர்மனையிலிருந்து மன்னாருக்கு வந்த பொழுதே இரண்டு வாகனங்களும் மோதி இவ்விபத்து நேரிட்டதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மோட்டர் பைசிக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *