கடந்த ஒரு வருடத்துக்கு மேல் மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்துக்கு இருந்து வந்த பாடசாலை அதிபர் வெற்றிடம் திங்கள் கிழமை (18) முதல் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தகுதியான ஒருவரையே இப்பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
இப்பாடசாலையின் புதிய அதிபராக எஸ்.எம்.சுல்ஹார் திங்கள் கிழமை (18) காலை 7.10 மணிக்கு தனது புதிய பதவியேற்பை ஏற்றுள்ளார். ஒரு வருடத்துக்கு மேலாக அதிபர் அற்ற நிலையில் பதில் அதிபரே இப்பாடசாலையை நிர்வகதித்து வந்தார்.
இவரின் பதவியேற்புக்கு எதிராக ஒரு சிலர் சம்பவம் அன்று (18) இவர் இப்பாடசாலைக்கு தகுதியற்றவர் என தெரிவித்த நிலையில் பாடசாலைக்கு முன்பாக ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் இவர் தனது பதவிக்கு தகுதியானவர் என்றும் இதனால்தான் இவரை கல்வித் திணைக்களம் இப்பாடசாலைக்கு நியமித்துள்ளது என்று அவரின் கல்வி சான்றிதழ்களை ஊடகங்களுக்கு காண்பித்து இப்பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
(வாஸ் கூஞ்ஞ)