மாகண சபை முறை அரசியலமைப்பிற்குள் வந்துவிட்டது அதரை இனி அகற்ற முடியாது , அதிகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம், இதற்காக புதிய பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் இன்று 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

மாற்றம் ஒன்றை கொண்டு வர யோசனை முன்வைத்தால் எதிரதரப்பு அதனை நிராகரிகிக்கும் ஆனால் இம்முறை எமது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது முழு ஆதரவையும தர முன்வந்துள்ளார்.

இதனால் நாட்டில் புதிய பிரச்சினை தேவையில்லை இருக்கும் பிரச்சினையே போதும் என பேசிய அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்போதும் 13 (பிளஸ்) மேலதிகமாக அதிகாரம்  வழங்க வேண்டும் என்ற நிலலப்பாட்டில் இருக்கிறார்.

அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என மனோ எம்.பி சொன்னார்.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *