(   நூரளை பி. எஸ். மணியம்)
நானுஓயா கிரிமிட்டிய நீரோடையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று  வெள்ளிக்கிழமை (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம்  இன்று(09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில்  உள்ள சிறிய  நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு  பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன் , வயது 49 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீரோடையில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
நானுஓயா கிரிமிட்டி  நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக நேற்று இரவு வீட்டில் கூறிவிட்டு சென்றவர் இன்று (09) காலை வரை வீட்டுக்கு வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.
இதனையடுத்து இவர் இவ்வாறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *