மட்டக்களப்பு , நாவலடி – பொலநறுவை பிரதான வீதியை அண்டிய காடுகளை தீயூட்டி காணிகளை கையாளும் நடவடிக்கையை கிழக்கு மாகண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடுத்துள்ளார்.
காடுகளை நெருப்பூட்டி கையகப்படுத்தும் நடவடிக்கையை கேள்விப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜனா கருணாகரம் உடனடியாக கிழக்கு மாகண ஆளுனரின் கவனத்திற்கு நேற்றிரவு கொண்டு வந்துள்ளார்.
ஆளுனரான செந்தில் தொண்டமான் உடனடியாக பாதுகாப்பு மற்றும் வனவளத்துறையுடன் கலந்துரையாடி அத்துமீறலை தடுத்து இருப்பதாக கருணாகரம் எம்ஃபி தனது முக நூலில் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்
மட்டக்களப்பு, நாவலடி- பொலன்நறுவை பிரதான வீதியை அண்டி காடுகள் நெருப்பூட்டி அத்துமீறி கையகப்படுத்துவதை அறிந்து இரவு(05.08.23) 9.30 மணிக்கு கிழக்கு ஆளுநரை நேரடியாக சந்தித்து பேசியதை தொடந்து ஆளுநர் அவர்கள் பொலிசார் மற்றும் வனவளத்துறையினரை தொடர்பு கொண்டு உடனடியாக அத்துமீறுபவர்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கோவிந்தன் ஜனா கருணாகரம் பா. உ.
என குறிப்பிட்டுள்ளார்.