நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “நீதியின் கழுத்தில் தூக்குக் கயிறு நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு”, ” உலகே உனக்கு கண் இல்லையா தமிழ் ஈழப் படுகொலைகள் நினைவில்லையா”, ” அடம் பிடிக்காதே ஐ.நாவே ஈழத் தமிழருக்கு ஆறுதல் அளித்திடு ஐ.நாவே”, ” வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் ” போன்ற பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.