பெரு நாட்டில் எட்டு ஊசிகளை விழுங்கிய 2 வயதுச் சிறுவன் தப்பி உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் தாயார் வேலைசெய்யும் பண்ணையில் விளையாடியபோது Hypodermic ஊசி எனும் தோலுக்கு அடியில் மருந்தேற்றும் சிறு ஊசிகளை விழுங்கியுள்ளார்.

மேலும், குறித்த தடுப்பூசி பண்ணையில் மாடுகளுக்கு போட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சிறுவனுக்கு உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறுவனின் வயிற்றிலும் குடலிலும் இருந்து ஊசிகள் மீட்கப்பட்டன. தற்போது சிறுவன் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *