போலந்தில் குடியிருப்பில் இருந்து 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ள 54 வயது Piotr மற்றும் 20 வயது Paulina ஆகிய இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டியில் இருந்த தந்தை மற்றும் மகள் மீது சந்தேகம் இருந்து வந்ததாகவே அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையிலேயே பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு 3 பச்சிளம் குழந்தைகளின் சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு சடலங்களும், சனிக்கிழமை ஒன்றும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.