இலங்கை வந்துள்ள பிரபல இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா, களனியில் அமைந்துள்ள பௌத்த ஆய்வு நிலையமொன்றுக்கு விஜயம் செய்துள்ளார்.

இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிரபுதேவா இன்றைய தினம் (18) களனியில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்திற்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரபுதேவா அந்த நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகு பெருநிறுவன சூழலில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாள் வருகை தர காத்திருப்பதாகவும் பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தின் இலங்கையின் துணைவேந்தர் போதாகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *