இன்று (24) பிற்பகல் மடுல்சிமை விராலிப்பத்தன பகுதியில் நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 55 வயதான தங்கவேலு ராசையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இவர் விராலிப்பத்தன மடூல்சிமை என்ற இடத்தில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது

விராலிப்பத்தன விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு அருகில் நபர் ஒருவர் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் மடூல்சிமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *