சஷி புண்ணியமூர்த்தி

இலங்கை தமிழரசுக்கட்சியின் கருவேப்பங்கேணி வட்டரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் மீது நேற்றிரவு சுமார் 9.20 மணியளவில் கொலைவெறித்தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச்சென்று கொண்டிருந்த வேளை, கூழாவடிச் சந்தியிலுள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே இனந்தெரியாத நபர்களால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு, அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் நடைபெறவிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட இருந்த தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் வைத்தியசாலை பொலிசார் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

சஷி புண்ணியமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *