(வாஸ் கூஞ்ஞ0

மன்னாரை ஒரு வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ந் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (15) மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில்

மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது நாட்டு கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இந்தத் திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது.

அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செய்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பாக எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.

மடுமாதாவிடம் பிராத்தனைச் செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றார்கள். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர்.

அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும்.

இங்கு கிடைக்கும் சூரிய சக்தி  , காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும்.

மேலும் பூநகரியை எரிசக்தி கிராமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த புனித பூமியும் வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

மேலும் இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தையர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் தலைமன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த அனைத்து செய்றபாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்யடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். ஆதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்;கிறேன் என்றும் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் ஆயர் கலாநிதி அதிவண இம்மானுவேல் பெர்னாண்டோ அனுராதபுரம் ஆயர் , காலி ஆயர் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் ஆண்டகைகள் இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்திமன்றத் தவைர் கலாநிதி சந்ரா பெர்னாண்டோ . இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்த்ன , செல்வம் அடைக்கலநாதன் , சாள்ஸ் நிர்மலநாதன் , தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *