அஸ்ரப் அலீ
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
கடந்த 23ம் திகதி அவர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு தனது பதவி ராஜினாமா குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன் பின் தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டும் வௌியேறியுள்ளார்.
குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மற்றும் பிக்குகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாகவே அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி அண்மையில் சரத் வீரசேகர தனது நாடாளுமன்ற உரையொன்றின் போது சரவணராஜா தொடர்பில் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது