இந்த வருடத்தில் இதுவரை 255 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, 2022ஆம் ஆண்டில் 559 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் ஏறக்குறைய 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டில் துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *