ஸ்பெயினில் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (11-09-2023) பார்சிலோனா நகரில் உள்ள மாண்ட்மெலோ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் 7 பேர் ரயில் கடவை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *