தென்னிலங்கை இனவாதிகள் 13வது திருத்ததினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(27.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

”வடகிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13வது திருத்தினை முழுமையான நடைமுறைப்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்லமுடியும்.

மேலும், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடகிழக்கு தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம். அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடகிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.” என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *