பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைதினை அந்நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
Protest footage from Zaman Park.🔥🔥🔥#پر_امن_ملک_گیر_احتجاج #نااہل_ہوگا_تیرا_باپ #ZamanPark #ImranKhan #BehindYouSkipperpic.twitter.com/s8jaQsiISN
— کپتان کا لاڈلا (@FakharSamtiah) August 5, 2023
அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இம்ரான் கான் மீதான வழக்கின் தீர்ப்பு காரணமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
I thank Allah for awakening my nation to stand up for their rights!
Public protest in Bahawalpur.#ImranKhan #لندن_پلان_نامنظور #پر_امن_ملک_گیر_احتجاج pic.twitter.com/1M7RKlFC0N
— Imran Khan (@ImranKhan_Force) August 5, 2023