சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களும் விடுதலையாகி  சென்னை திரும்பியுள்ளனர்

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த, 10 மீனவர்களை கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்திய மத்திய,  தமிழ்நாடு மாநில அரசுகளின் நடவடிக்கையால், 10 மீனவர்களும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நேற்று காலை  கட்டுநாயக்காவில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் 10 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். பின்னர், வாகனத்தில், 10 பேரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *